ADDED : மார் 15, 2025 01:42 AM
உணவு பாதுகாப்பு அலுவலர் ஆய்வு
சென்னிமலை:சென்னிமலை வட்டார உணவு பாதுகாப்பு அலுவ லர் நீலமேகம், சென்னிமலை பேரூராட்சி சுகாதார மேற்பார்வையாளர், பணியாளர்கள் இணைந்து, சென்னிமலையில் பழக்கடை, மளிகை கடை, பேக்கரி, சிக்கன், கறிக்கடை, உணவகங்களில் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பேக், கவர் மற்றும் புகையிலை பொருட்கள் விற்கப்படுகிறதா? என ஆய்வு செய்தனர். மொத்தம், 18 கடைகளில் ஆய்வு நடந்ததில், கேரி பேக் பயன்படுத்திய ஐந்து கடைகளுக்கு தலா, ௨,௦௦௦ ரூபாய்; காலாவதி உணவு பொருள் விற்பனைக்கு வைத்திருந்த ஒரு கடைக்கு, ௧,௦௦௦ ரூபாய் அபராதம் விதித்தனர். பழக்கடை மற்றும் தர்பூசணி விற்பனை செய்யும் கடைகளில் ஆய்வு செய்வதில், செயற்கை வண்ணம் கலந்த தர்பூசணி பழம் எதுவும் கண்டறியப்படவில்லை. உணவுப் பொருள் தொடர்பான புகார்களை, 94440-42322 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் தெரிவிக்கலாம் எனவும் தெரிவித்தனர்.