/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சிறுமியை திருமணம் செய்த டிரைவர் மீது போக்சோ
/
சிறுமியை திருமணம் செய்த டிரைவர் மீது போக்சோ
ADDED : மார் 25, 2025 12:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிறுமியை திருமணம் செய்த டிரைவர் மீது போக்சோ
ஈரோடு:கொடுமுடி, வடக்கு மூர்த்தி பாளையத்தை சேர்ந்தவர் சிதம்பரம், 39; லாரி டிரைவரான இவர், ஈரோட்டை சேர்ந்த, 17 வயது சிறுமியுடன் சமூக வலைதளத்தில் பழகினார். கடந்த, ௨௦௨௪ பிப்., மாதம் சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்தார். சிறுமியின் தாயார் புகாரின்படி கொடுமுடி போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் கரூர், வெங்கமேட்டில் சிறுமியுடன் வசிப்பது தெரிய வந்தது. சிறுமி தற்போது ஒன்பது மாத கர்ப்பமாக உள்ளார். குழந்தை திருமண தடை சட்ட பிரிவு, போக்சோ என இரு பிரிவுகளில், சிதம்பரம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.