sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

விற்பனை குழு குளிர்பதன கிடங்குகளில்விளைபொருட்களை வைக்க அழைப்பு

/

விற்பனை குழு குளிர்பதன கிடங்குகளில்விளைபொருட்களை வைக்க அழைப்பு

விற்பனை குழு குளிர்பதன கிடங்குகளில்விளைபொருட்களை வைக்க அழைப்பு

விற்பனை குழு குளிர்பதன கிடங்குகளில்விளைபொருட்களை வைக்க அழைப்பு


ADDED : ஏப் 01, 2025 02:12 AM

Google News

ADDED : ஏப் 01, 2025 02:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விற்பனை குழு குளிர்பதன கிடங்குகளில்விளைபொருட்களை வைக்க அழைப்பு

ஈரோடு:ஈரோடு மாவட்ட வேளாண் விற்பனை குழுவின் கீழ், 2,975 டன் விளை பொருட்களை குளிர்பதன கிடங்கில் வைக்கும் வசதி உள்ளது. இதுபற்றி, வேளாண் விற்பனை குழு செயலர் மற்றும் வேளாண் துணை இயக்குனர் சாவித்ரி கூறியதாவது:

மாவட்ட அளவில் வேளாண் விற்பனை குழுவின் கீழ், 57 குடோன்கள் உள்ளன. அதில், 74,904 டன் விளைபொருட்களை இருப்பு வைத்து, உரிய விலை கிடைக்கும்போது விற்கலாம். குடோன்களில் ஒரு குவிண்டால் விளைபொருளுக்கு விவசாயிகளுக்கு, நாள் ஒன்றுக்கு, 25 காசு, வியாபாரிகள் வைத்தால், 50 காசு கட்டணம் பெறப்படும். அதிகபட்சம் மஞ்சளுக்கு, 365 நாட்களும், பிற விளை பொருளுக்கு, 180 நாட்கள் வரை இருப்பு

வைக்கலாம்.தவிர குளிர் பதன கிடங்குகள் அந்தியூர், அவல்பூந்துறை, கொடுமுடி, புன்செய் புளியம்பட்டியில் தலா, 25 டன் குடோன், சித்தோடு, வெள்ளாங்கோவில், வெப்பிலியில் தலா, 250 டன் குடோன், சத்தியமங்கலத்தில், 125 டன் குடோன், தாளவாடி, பர்கூரில் தலா, 500 டன் குடோன், கோபியில், 1,000 டன் குடோன் என, 2,975 டன் பொருளை இருப்பு வைக்காலம்.

இவற்றில், ஆப்பிள் ஒரு பெட்டி - ஒரு மாதம் வைக்க, 15 ரூபாய், பழங்கள் ஒரு கிலோ, ஒரு மாதம் வைக்க, 60 காசுகள், காய்கறிகள், பூக்கள், 3 நாட்கள் வைக்க கிலோவுக்கு, 1.50 ரூபாய், கேரட் ஒரு குவிண்டால், 1 மாதத்துக்கு, 35 ரூபாய், மிளகாய் ஒரு டன் ஒரு மாதத்துக்கு, 500 ரூபாய் கட்டணம் பெறப்படுகிறது. இவ்வாறு கூறினார்.






      Dinamalar
      Follow us