sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கூலி பாக்கி தரும் வரை போராட்டம்: 100 நாள் தொழிலாளர்கள் முடிவு

கூலி பாக்கி தரும் வரை போராட்டம்: 100 நாள் தொழிலாளர்கள் முடிவு

கூலி பாக்கி தரும் வரை போராட்டம்: 100 நாள் தொழிலாளர்கள் முடிவு


ADDED : ஏப் 03, 2025 01:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 03, 2025 01:43 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

கூலி பாக்கி தரும் வரை போராட்டம்: 100 நாள் தொழிலாளர்கள் முடிவு

சத்தியமங்கலம்:நுாறு நாள் வேலை திட்டத்தில், பாக்கி தொகை கிடைக்கும் வரை, வேலை செய்யாமல் தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட, நுாறு நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டம், சத்தியமங்கலம் சங்க அலுவலகத்தில் முன்னாள் எம்.எல்.ஏ., சுந்தரம் தலைமையில் நடந்தது.

கூட்டத்தில், மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ், மத்திய அரசு தமிழகத்திற்கு விடுவிக்க வேண்டிய நிதி பாக்கி, 4,034 கோடி ரூபாயை உடனடியாக வழங்க வேண்டும்.

பவானிசாகர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி வட்டாரங்களில், 40 ஊராட்சிகளில், 40 ஆயிரம் விவசாய தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். நான்கு மாதங்களாக செய்த வேலைக்கு, கூலி வழங்கப்படாமல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களும் பல கட்ட போராட்டங்களை நடத்தியுள்ளனர்.

மூன்று வட்டாரங்களை சேர்ந்த தொழிலாளர்கள், நிலுவையில் உள்ள கூலி பாக்கியை வழங்கும் வரை, தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என, கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இந்திய கம்யூ., மாவட்ட செயலர் மோகன்குமார், சங்க மாநில செயலர் மகேந்திரன் மற்றும் ஒன்றிய செயலர்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us