/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
போலீஸ் ஸ்டேஷனில் அதிகாலையில் நடந்த மர்ம பூஜை குறித்து விசாரணை
/
போலீஸ் ஸ்டேஷனில் அதிகாலையில் நடந்த மர்ம பூஜை குறித்து விசாரணை
போலீஸ் ஸ்டேஷனில் அதிகாலையில் நடந்த மர்ம பூஜை குறித்து விசாரணை
போலீஸ் ஸ்டேஷனில் அதிகாலையில் நடந்த மர்ம பூஜை குறித்து விசாரணை
ADDED : ஆக 26, 2024 08:22 AM
வெள்ளகோவில்: திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் போலீஸ் ஸ்டேஷன், திருப்பூர் மாவட்ட கிழக்கு எல்லையிலும், கரூர் மற்றும் ஈரோடு மாவட்ட எல்லை பகுதியில் உள்ளது. இதனால் மூன்று மாவட்-டங்களுக்கு சோதனை சாவடிகள் இன்றி எளிதில் அண்டை மாவட்டங்களுக்கு குற்றவாளிகள் தப்பி செல்ல முடியும்.
இதனால் வெள்ளகோவில் ஸ்டேசன் எல்லைக்குள் கஞ்சா, லாட்டரி, கொள்ளை, வழிப்பறி எப்போதும் அதிகம். கள்ளக்கு-றிச்சி சாராய சம்பவத்தை தொடர்ந்து வெள்ளகோவில் பகுதியில் நுாற்றுக்கணக்கான லிட்டர் கள்ளச்சாராயம் பிடிபட்டது. இந்நி-லையில் நேற்று அதிகாலை, இன்ஸ்பெக்டர் ஞானபிரகாசம் ஏற்-பாட்டில், சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் தலைமையில், போலீஸ் ஸ்டேஷனில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பூஜை நடந்துள்ளது. இதில் மந்திரவாதிகளும் பங்கேற்றதாக, சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. இதுகுறித்து திருப்பூர் மாவட்ட போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

