sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

விதை மஞ்சள் ரூ.70க்கு விற்பனை இருப்பு குறைவால் விலை உயர்வு

/

விதை மஞ்சள் ரூ.70க்கு விற்பனை இருப்பு குறைவால் விலை உயர்வு

விதை மஞ்சள் ரூ.70க்கு விற்பனை இருப்பு குறைவால் விலை உயர்வு

விதை மஞ்சள் ரூ.70க்கு விற்பனை இருப்பு குறைவால் விலை உயர்வு


ADDED : ஜூலை 03, 2024 09:06 AM

Google News

ADDED : ஜூலை 03, 2024 09:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, : ஈரோட்டில் விதை மஞ்சள் இருப்பு குறைவாக உள்ளதால், கிலோ, 70 ரூபாய்க்கு விற்கப்படுகி-றது.

ஈரோடு மாவட்டத்தில் கொடுமுடி, சிவகிரி, மொடக்குறிச்சி, அந்தியூர், தாளவாடி உட்பட சில பகுதிகளில், 7,000 ஏக்கருக்கு மேல் மஞ்சள் சாகு-படி செய்யப்படுகிறது. தற்போது மஞ்சள் நடவுப்-பணி நடந்து வரும் நிலையில் விதை மஞ்சள் விலை உயர்ந்துள்ளது. கடந்த மே மாதம் ஒரு கிலோ, 40 ரூபாய்க்கு விற்பனையானது. தற்போது விரலி மஞ்சள் ரகம், 70 ரூபாயாக உயர்ந்துள்ளது.

இதுபற்றி கீழ்பவானி ஆயக்கட்டு நில உரிமை-யாளர் சங்க தலைவர் பெரியசாமி கூறியதாவது: எனது வயலில், 2.5 ஏக்கரில் விரலி ரக மஞ்சள் சாகுபடி செய்திருந்தேன். அறுவடையின்போது, 5,000 கிலோ வரை விதை மஞ்சள் தனியாக எடுத்துள்ளேன். கடந்த மே மாதம் ஒரு கிலோ, 40 ரூபாய்க்கும் கடந்த வாரம், 60 ரூபாய்க்கும் விற்-பனை செய்தேன். பவானிசாகர் அணைக்கு நீர்வ-ரத்து உள்ளதாலும், பருவமழை கை கொடுக்கும் என்ற நம்பிக்-கையில் மஞ்சள் சாகுபடி துவங்கி உள்ளது. இவ்-வாறு கூறினார்.

ஈரோடு மஞ்சள் வியாபாரிகள் மற்றும் குடோன் உரிமையாளர் சங்க செயலாளர் சத்தியமூர்த்தி கூறியதாவது:

விதை மஞ்சள் விலை உயர்ந்து தற்போது ஒரு கிலோ, 70 ரூபாய்க்கு விற்பனையாகிறது. தற்-போது பரவலாக மழை பெய்து வருவதால், மஞ்சள் சாகுபடி துவங்கி உள்ளது. தமிழகம் மட்-டுமின்றி கர்நாடகா, மஹாராஷ்டிரா, தெலுங்-கானா மாநிலங்களிலும் விதை மஞ்சளுக்கு அதிக தேவை உள்ளது. எனவே விலை மேலும் உயர வாய்ப்புள்ளது. இவ்வாறு கூறினார்.






      Dinamalar
      Follow us