sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பெருந்துறை மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம்

/

பெருந்துறை மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம்

பெருந்துறை மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம்

பெருந்துறை மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம்


ADDED : ஜூலை 06, 2024 06:10 AM

Google News

ADDED : ஜூலை 06, 2024 06:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெருந்துறை : சிப்காட்டில் உள்ள மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில், கோரிக்கைகளை வலியுறுத்தி, மக்கள் உள்ளிருப்பு போராட்டம் மேற்கொண்டனர்.

சிப்காட்டில் உள்ள மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில், நேரடி கலந்தாய்வு அமர்வு, ஒவ்வொரு மாதமும், 5ம் தேதி காலை, 11:௦௦ மணி முதல் மதியம், 1:௦௦ மணி வரை நடக்கும். லோக்சபா தேர்தல் நடத்தை விதியால் மூன்று மாதங்களாக கூட்டம் நடக்கவில்லை.

தேர்தல் நடத்தை விதி வாபசான நிலையில், வழக்கமான மாதாந்திர குறை கேட்பு கூட்டம் நேற்று நடப்பதாக அறிவிக்கப்-பட்டது. இதனால் ஆண்கள், பெண்கள் என நுாற்றுக்கும் மேற்-பட்டோர் அலுவலகத்துக்கு வந்தனர். கூட்டம் நடக்கும் அரங்கு, வாரிய அலுவலகமாக மாற்றப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்-தனர்.

இதனால் மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட அதிகாரி சாமிநா-தனை சந்தித்து, குறைகளை தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டது. இதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: குறை கேட்பு கூட்டம் நடக்கும் அரங்கை, அலுவலகமாக மாற்றி விட்டனர். எங்கள் குறைகளை அதிகாரிகள் கவனத்துக்கு எப்படி சொல்வது? உடன-டியாக குறைதீர் கூட்டரங்கை ஏற்படுத்தி, மக்களை அழைத்து குறை கேட்க வேண்டும். கோரிக்கை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும். இவ்வாறு கூறினர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட, ௫ பெண்கள் உட்பட, ௪௩ பேரை பெருந்துறை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us