sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/மாநகரில் சிக்கிய மலைப்பாம்பு

மாநகரில் சிக்கிய மலைப்பாம்பு

மாநகரில் சிக்கிய மலைப்பாம்பு


ADDED : ஜூன் 15, 2024 09:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 15, 2024 09:19 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு, காசிபாளையம் பகுதியில் ஓடையோர புதரில், நேற்று வித்தியாசமான சத்தம் கேட்டது. அப்பகுதி மக்கள் சென்று பார்த்தபோது, மிகப்பெரிய பாம்பு அங்குமிங்கும் செல்வதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து ஈரோடு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தந்தனர். நிலைய அதிகாரி முத்துசாமி, பழனிவேல் ராஜன் உட்பட தீயணைப்பு வீரர்கள் எட்டு பேர் விரைந்தனர்.

ஒரு புதர் மறைவில் பொந்துக்குள் தலையை நுழைத்திருந்த, மலைப்பாம்பை லாவகமாக பிடித்தனர். 10 அடி நீளத்தில் இருந்த பாம்பை பார்த்து, வேடிக்கை பார்த்த பலர் பீதியடைந்தனர். இதேபோல் கொல்லம்பாளையம் அரசு துவக்கப்பள்ளி அருகே, ஒரு சாரைப்பாம்பு நடமாடுவதாக தகவல் வரவே, தீயணைப்பு வீரர்கள் அங்கும் சென்று பாம்பை பிடித்தனர்.

இவ்விரு பாம்பையும், ஈரோடு ரோஜா நகரில் உள்ள வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். மாநகரில் மலைப்பாம்பு பிடிபட்ட விஷயம், தீயணைப்பு நிலைய வீரர்களை மட்டுமின்றி, மக்களையும் ஆச்சர்யத்தில் தள்ளியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us