நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தமிழ் மாத முதல் நாளில் விஷ்ணுபதி புண்யகாலம் வைணவர்களால் கொண்டாடப்படுகிறது.
இத்தினத்தில் பெருமாள் கோவிலை, 27 முறை வலம் வந்தால் நினைத்த காரியம் கைகூடும் என்று ஐதீகம். விஷ்ணுபதி புண்யகாலமான நேற்று, ஏராளமான பக்தர்கள் ஈரோடு கோட்டை கஸ்துாரி அரங்கநாதர் கோவிலை வலம் வந்தனர். காலை முதல் மதியம் வரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வணங்கி வழிபட்டனர்.

