நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
௨,௦௦௦ டன் நெல் வருகை
ஈரோடு, ஆக. 25-
மயிலாடுதுறையில் இருந்து சரக்கு ரயிலில் ஈரோட்டுக்கு, 2,000 டன் நெல் நேற்று ஈரோடு கூட்ஸ்ஷெட்டுக்கு வந்தது. சுமை தொழிலாளர்கள் இறக்கி லாரிகளில் ஏற்றி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக குடோன்களுக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து தனியார் அரவை ஆலைகளுக்கு அனுப்பி அரிசியாக்கப்பட்ட பின், ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு வினியோகம் செய்யப்படும்.