ADDED : ஜன 07, 2025 02:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு
ஈரோடு, தமிழகத்தில் வக்கீல்கள் தாக்கப்படுவதையும், படுகொலை செய்யப்படுவதையும் தடுக்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக வக்கீல்கள் பாதுகாப்பு சட்டத்தை இயற்றக்கோரி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வக்கீல் சங்க கூட்டுக்குழு சார்பில், நேற்று நீதிமன்ற புறக்கணிப்பு நடந்தது. இதன்படி ஈரோடு மாவட்டம் சார்பில், ஈரோடு சம்பத்நகரில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் மற்றும் பவானி, கோபி, சத்தி, கொடுமுடி, பெருந்துறை உள்ளிட்ட நீதிமன்றங்களில் பணியாற்றும், ௨,௦௦௦க்கும் மேற்பட்டோர் நேற்று நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

