ADDED : ஜன 17, 2025 01:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
யானை தாக்கி தொழிலாளி பலி
சத்தியமங்கலம், :கடம்பூரை அடுத்த உகினியம் மலை கிராமத்தை சேர்ந்தவர் ராஜப்பன், 35; மக்காச்சோள காட்டுக்கு காவல் காக்கும் பணியில் நேற்று முன்தினம் இரவு ஈடுபட்டிருந்தார். அப்போது ஒற்றை யானை தாக்கியதில் படுகாயமடைந்தார்.
சத்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. இதுகுறித்து கடம்பூர் போலீசார், சத்தி வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.