/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பவானி ஆற்றில் குளித்தபட்டதாரி மாயமானார்
/
பவானி ஆற்றில் குளித்தபட்டதாரி மாயமானார்
ADDED : ஜன 19, 2025 01:46 AM
பவானி ஆற்றில் குளித்தபட்டதாரி மாயமானார்
டி.என்.பாளையம்,: திருப்பூர் மாவட்டம் பூலுவப்பட்டி கூத்தம்பாளையம் பிரிவை சேர்ந்த ரவி மகன் யோகேஸ்வரன், 27; பட்டப்படிப்பு முடித்து வீட்டில் இருந்தார். பங்களாப்புதுார் அருகே நஞ்சை புளியம்பட்டி பவானி ஆற்றுக்கு, நண்பர்கள் சிலருடன் குளிக்க யோகேஸ்வரன் நேற்று வந்தார். ஆழமான பகுதிக்கு சென்றபோது யோகேஸ்வரன் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தார். நண்பர்களால் காப்பாற்ற முடியாத நிலையில், கோபி தீயணைப்பு நிலையம், பங்களாப்புதுார் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். கோபி தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்றனர். மாலை வரை தேடியும் கிடைக்கவில்லை. இரவானதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது. நாளை (இன்று) காலை தேடும் பணி தொடரும் என்று தெரிவித்தனர்.

