ADDED : பிப் 09, 2025 01:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி பக்தர் விபத்தில் பலி
காங்கேயம்:பவானி, குருக்கநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜீவேந்திரன், 54; பழனி முருகன் கோவிலுக்கு பாத யாத்திரையாக பக்தர்கள் கூட்டத்துடன் நேற்று முன்தினம் இரவு காங்கேயம் வழியாக இரவு, 8:30 மணி அளவில் ஊதியூர் அருகே சென்று ண்டிருந்தார். அப்போது எக்ஸ்.எல்., சூப்பர் மொபட் மோதியதில் பலத்த காயமடைந்தார். காவடி குழுவினர் அவரை மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பரிசோதனையில் மருத்துவர் ஜீவேந்திரன் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது.