ADDED : பிப் 13, 2025 01:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தவறி விழுந்து கண்டக்டர் சாவு
பவானி:பவானி அருகே, ஒலகடம் அம்மன் கோவில் தோட்டத்தை சேர்ந்தவர் கார்த்தி, 41; ஈரோடு அரசு போக்குவரத்து பணிமனையில், தற்காலிக கண்டக்டராக பணிபுரிந்தார். நேற்று முன்தினம், ஈரோடு-பவானி வழித்தடத்தில் சென்று வரும், 5-ம் நம்பர் டவுன் பஸ்ஸில் டியூட்டியில் இருந்தார். காலிங்கராயன்பாளையம் வளைவில் திரும்பிய
போது, படியில் நின்று கொண்டிருந்த கார்த்தி தவறி விழுந்தார். பலத்த காயமடைந்த அவரை, தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று இறந்தார்.
உங்கள் மாவட்ட தொகுதிகளின் முழுமையான தேர்தல் தகவல்களை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

