ADDED : பிப் 19, 2025 01:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மில்லில் திருடியவர் கைது
கோபி:கோபி அருகே புதுப்பாளையத்தை சேர்ந்தவர் விமல், 36; அதே பகுதியில் மாவு மில் நடத்தி வருகிறார். மில்லில் கல்லாப்பெட்டியில் வைத்திருந்த, ௫௦ ஆயிரம் ரூபாய் திருட்டு போனது. இதுகுறித்து விமல் புகாரின்படி கோபி போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில் பணத்தை திருடிய கோபியை சேர்ந்த மனோஜ், ௨௫, என்பவரை, நேற்று கைது செய்தனர்.

