/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஆடு திருடிய 'ஜோடி'போலீசில் சிக்கியது
/
ஆடு திருடிய 'ஜோடி'போலீசில் சிக்கியது
ADDED : பிப் 19, 2025 02:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆடு திருடிய 'ஜோடி'போலீசில் சிக்கியது
தாராபுரம்:தாராபுரத்தை அடுத்த குண்டடம்-ஊதியூர் சாலையில், குண்டடம் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது டூவீலரில் ஆட்டுடன் இருவர் வந்தனர். விசாரணையில் பழனியை சேர்ந்த கணேசன், 38; தாராபுரம், ராஜேந்திரா நகரை சேர்ந்த சித்ரா, 46, என்பது தெரிந்தது. செம்மாம்பாளையம் பகுதியில் தோட்டத்தில் மேய்ந்த ஆட்டை திருடி செல்வதையும் ஒப்புக்கொண்டனர். போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.