ADDED : மார் 02, 2025 01:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொழிலாளியை கொன்றசக தொழிலாளி கைது
தாராபுரம்:தாராபுரத்தை அடுத்த சின்னக்காம்பாளையத்தில் தனியார் கோழிப்பண்ணை உள்ளது. இங்கு ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சுப்பாராவ், 45, தொழிலாளியாக வேலை செய்தார். இவருடன் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த கரி தீனபந்து, 38, வேலை செய்தார்.
இரவில் ஏற்பட்ட வாக்குவாதத்தில், சுப்பாராவை அரிவாளால் வெட்டி கொன்று கரி தீனபந்து தலைமறைவானார். நேற்று முன்தினம் தீனபந்துவை, தாராபுரம் போலீசார் கைது செய்தனர். மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.