ADDED : மார் 06, 2025 01:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அறங்காவலர் குழு தலைவர் நியமனம்
பவானி:அம்மாபேட்டையில் உள்ள மீனாட்சி உடனமர் சொக்கநாதர் கோவிலுக்கு அறங்காவலர் குழு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். கோவில் வளாகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், தலைவராாக நாகராஜன், உறுப்பினர்களாக தென்றல், காளியப்பன் பொறுப்பேற்று கொண்டனர். நிகழ்வில் மாவட்ட அறங்காவலர் குழுத்தலைவர் சிவக்குமார், ஹிந்து அறநிலையத்துறை ஈரோடு இணை ஆணையர் பரஞ்சோதி, உதவி ஆணையர் சுகுமார், கோவில் செயல் அலுவலர் சீனிவாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.