ADDED : மார் 06, 2025 01:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விபத்து வழக்கில்அரசு பஸ் ஜப்தி
தாராபுரம்:தாராபுரம், தொப்பம்பட்டியை சேர்ந்தவர் நல்லான். கடந்த, 2015 ஜூலை 5ல், பூளவாடியில் இருந்து தாராபுரம் சென்ற அரசு பஸ்சில் இருந்து இறங்கும்போது, டிரைவர் பஸ்ஸை இயக்கியதால் கீழே விழுந்ததில் பலியானார். இதுதொடர்பான நஷ்ட ஈடு வழக்கில், இறந்த நல்லான் மனைவி சுப்பம்மாளுக்கு, 5.௩௭ லட்சம் ரூபாய் வழங்க, தாராபுரம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். அரசு போக்குவரத்து கழகம் வழங்காததால் நிறைவேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி சரவணன், வட்டியுடன் சேர்த்து, ௭.௯௨ லட்சம் ரூபாய் செலுத்த உத்தரவிட்டார். இதையும் செலுத்தாததால், தாராபுரம் பஸ் ஸ்டாண்டில் நேற்று மதியம் வந்த அரசு பஸ்சை, நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.