/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
காய்கறி வேனில் குட்கா கடத்திவந்தவர் கைது
/
காய்கறி வேனில் குட்கா கடத்திவந்தவர் கைது
ADDED : மார் 19, 2025 01:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காய்கறி வேனில் குட்கா கடத்திவந்தவர் கைது
சத்தியமங்கலம்:ஆசனுார் போலீசார் நேற்று முன்தினம் இரவு சோதனைச்சாவடியில் வழக்கமான வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். காய்கறி ஏற்றி வந்த ஒரு ஈச்சர் வேனில் சோதனை செய்தனர். இதில் மூட்டைகளுக்கு அடியில், 70 கிலோ குட்கா பொருட்களை கடத்தி செல்வது தெரிந்தது. டிரைவரான மதுரை, திருமங்கலம், பொன்னமங்கலத்தை சேர்ந்த சிவக்குமாரை, 42, கைது செய்து, குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.