ADDED : மார் 20, 2025 01:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரசு பஸ் மோதி விவசாயி பலி
காங்கேயம்:திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே பெரியஇல்லியம், ஆலங்காடுதோட்டத்தை சேர்ந்தவர் சேமலையப்ப கவுண்டர்,75, விவசாயி. இவர் நேற்று காலை, 10:30 மணியளவில் தனது எக்ஸ்.எல்.,சூப்பர். மொபட்டில் காங்கேயம் - திருப்பூர் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது, கடைக்கு செல்வதற்காக தனது வாகனத்தை திருப்பினார். அப்போது, திருச்சி செல்ல வந்த அரசு பஸ் மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார். காங்கேயம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.