ADDED : மார் 22, 2025 01:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரசு நடுநிலை பள்ளியில் ஆண்டு விழா
பெருந்துறை:பெருந்துறையை அடுத்த சுண்டக்காம்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா, இலக்கிய மன்ற விழா மற்றும் விளையாட்டு விழா என முப்பெரும் விழா நேற்று நடந்தது. வட்டார கல்வி அலுவலர் -விஸ்வநாதன் தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் காளியப்பன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் பழநி பங்கேற்று பரிசு வழங்கினார். பி.டி.ஏ., தலைவர் பழனிச்சாமி, ஊர்மக்கள், முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.