sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வெயிலால் துாய்மை பணியாளர் நேரம் மாற்றம்

/

வெயிலால் துாய்மை பணியாளர் நேரம் மாற்றம்

வெயிலால் துாய்மை பணியாளர் நேரம் மாற்றம்

வெயிலால் துாய்மை பணியாளர் நேரம் மாற்றம்


ADDED : மார் 26, 2025 01:43 AM

Google News

ADDED : மார் 26, 2025 01:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வெயிலால் துாய்மை பணியாளர் நேரம் மாற்றம்

ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் நாளுக்குநாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. சுட்டெரிக்கும் வெயிலிலும் மாநகராட்சி துாய்மை பணிகள் காலை முதல் மாலை வரை மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில் வெயில் காரணமாக துாய்மை பணியாளர்ளுக்கு மதிய நேர பணி ரத்து செய்யப்பட்டு பணி நேரம் மாற்றப்பட்டுள்ளது. காலை, 6:00 மணி முதல், 1:00 மணி வரை ஒரு ஷிப்ட்; மதியம், 3:00 மணி முதல் இரவு, 9:00 மணி வரை ஒரு ஷிப்ட் என மாற்றப்பட்டுள்ளது.

இதே போல் குப்பை கிடங்கு மற்றும் குப்பைகளை உரமாக்கும் மையங்களில் பணியாற்றும் துாய்மை பணியாளர்களுக்கும் பணி நேரம் மாற்றப்பட்டுள்ளது. நண்பகல் முதல் மாலை வரை பணிகள் இருக்காது.

இதுகுறித்து மாநகர நல அலுவலர் கார்த்திகேயன் கூறியதாவது: வெயில் தாக்கம் குறையும் வரை மதிய நேர பணி துாய்மை பணியாளர்களுக்கு வழங்கப்படமாட்டாது. தாக்கம் குறைந்த பின் வழக்கம்போல பணி நடக்கும். வெயில் தாக்கத்தால் ஏற்படும் நீர்சத்து குறைபாட்டினை போக்க மாநகராட்சியில் பணியாற்றும், 2,000 துாய்மை பணியாளர்ளுக்கும், உப்பு சர்க்கரை கரைசல் வழங்கப்பட உள்ளது. துாய்மை பணியாளர்களுக்கு ஏற்கனவே மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us