சுகாதார வளாக கட்டடத்தில்பதுங்கியிருந்த பாம்பு மீட்பு
சுகாதார வளாக கட்டடத்தில்பதுங்கியிருந்த பாம்பு மீட்பு
ADDED : மார் 27, 2025 01:40 AM
அ நிறம் | அளவு
சுகாதார வளாக கட்டடத்தில்பதுங்கியிருந்த பாம்பு மீட்பு
குளித்தலை:குளித்தலை, கடம்பவனேஸ்வரர் கோவில் கீழ் பகுதியில், நகராட்சி சார்பில் பொது சுகாதார வளாகம் கட்டும் பணி நடந்து வருகிறது.
கட்டுமான பணிக்காக கொட்டப்பட்ட செங்கல்லில், ஒரு பாம்பு இருந்துள்ளது. இதை பார்த்த கட்டுமான தொழிலாளர்கள், முசிறி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
பின்னர். தீயணைப்பு வீரர்கள் செங்கல் அடுக்கி வைக்கப்பட்டுள்ள இடத்தில், சுருண்டு இருந்த, 6 அடி நீளமுள்ள சாரை பாம்பை லாவகமாக பிடித்தனர். பின், அந்த பாம்பை தும்பலம் காட்டுப்பகுதியில் தீயணைப்பு வீரர்கள் விட்டனர்.
