/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
காங்கேயத்தில் மர்ம சத்தம்அடிக்கடி எழுவதால் அச்சம்
/
காங்கேயத்தில் மர்ம சத்தம்அடிக்கடி எழுவதால் அச்சம்
ADDED : மார் 27, 2025 01:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயத்தில் மர்ம சத்தம்அடிக்கடி எழுவதால் அச்சம்
காங்கேயம்:காங்கேயத்தில் நேற்று மதியம், 2:00 மணி அளவில் நிலம் மற்றும் கட்டடங்கள் அதிரும் வகையில் அதீத சத்தம் உணரப்பட்டது. இந்த சத்தம் சமீபமாக காங்கேயம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் அடிக்கடி கேட்பதாக மக்கள் கூறுகின்றனர்.
இதனால் மக்கள் பயந்து வீடு, அலுவலகங்களை விட்டு வெளியேறுவது வாடிக்கையாக உள்ளது. அதேசமயம் உணவகம் மற்றும் பேக்கிரியில் கண்ணாடி பொருட்கள் விழுந்து உடைகின்றன. எங்கிருந்து சத்தம் வருகிறது என்றும் யாருக்கும் தெரிவதில்லை. மொத்தத்தில் மர்ம சத்தத்தால் மக்கள்,
அச்சத்துக்கு ஆளாகியுள்ளனர்.