/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
புளியமரத்தில் பைக் மோதிகறிக்கடை தொழிலாளி பலி
/
புளியமரத்தில் பைக் மோதிகறிக்கடை தொழிலாளி பலி
ADDED : ஏப் 02, 2025 01:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புளியமரத்தில் பைக் மோதிகறிக்கடை தொழிலாளி பலி
நம்பியூர்:-நம்பியூர், செட்டியம்பதியை சேர்ந்த முத்துசாமி மகன் சுகேந்திரன், 21; நம்பியூர் கறிக்கடை தொழிலாளி. குருமந்துார் அருகே உள்ள ஆயிபாளையம் மாரியம்மன் கோவிலில் கம்பத்தாட்டம் நிகழ்ச்சிக்கு சென்று விட்டு, வீட்டுக்கு பைக்கில் நேற்று முன்தினம் இரவு சென்றார். கே.மேட்டுப்பாளையம் என்ற இடத்தில் வளைவில் கட்டுப்பாட்டை இழந்த டூவீலர், சாலையோர புளியமரத்தில் மோதியதில் படுகாயம் அடைந்தார். சுகேந்திரனை தொடர்ந்து அவரது வந்த அண்ணன் சுசேந்தர், சக நண்பர்கள் மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு
சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே இறந்து விட்டார்.

