sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பெரிய மாரியம்மன் கோவில் கம்பம் ஊர்வலம்

பெரிய மாரியம்மன் கோவில் கம்பம் ஊர்வலம்

பெரிய மாரியம்மன் கோவில் கம்பம் ஊர்வலம்


ADDED : ஏப் 05, 2025 01:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 05, 2025 01:55 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பெரிய மாரியம்மன் கோவில் கம்பம் ஊர்வலம்

ஈரோடு:ஈரோடு பெரிய மாரியம்மன் வகையறா கோவில்களில் இன்று கம்பம் பிடுங்கும் விழா, மஞ்சள் நீராட்டு நடப்பதால், போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு மாநகரின் பெரிய மாரியம்மன் கோவில், அதன் வகையறா கோவில்களான சின்ன மாரியம்மன், காரைவாய்க்கால் மாரியம்மன் கோவில்களில், நடப்பாண்டு குண்டம் மற்றும் தேர்த்திருவிழா கடந்த, 18ல் பூச்சாட்டுதலுடன் துவங்கியது. முக்கிய நிகழ்வாக கடந்த, 1ல் காரை வாய்க்கால் மாரியம்மன் கோவிலில் குண்டம் விழா, 2ம் தேதி சின்ன மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது.

விழா இறுதி நிகழ்வாக பெரிய மாரியம்மன் உட்பட மூன்று கோவில்களிலும் கம்பம் பிடுங்கும் நிகழ்ச்சி இன்று மதியம், 3:00 மணிக்கு நடக்கிறது. மூன்று கோவில்களின் கம்பங்களை பிடுங்கி, பூசாரிகள் தோளில் சுமந்தபடி ஊர்வலமாக வருவர். பெரிய மாரியம்மன் கோவில் கம்பம் பன்னீர்செல்வம் பூங்கா வழியாகவும், சின்ன மாரியம்மன் கோவில் கம்பம் அக்ரஹாரம் வீதி வழியாகவும், காரை வாய்க்கால் மாரியம்மன் கோவில் கம்பம் கச்சேரி வீதி வழியாக ஊர்வலமாக எடுத்து வரப்படும்.

மணிக்கூண்டு பகுதியில் மூன்று கம்பங்களும் ஒன்று சேரும். பின், ஈஸ்வரன் கோவில் வீதி வழியாக காமராஜர் வீதி, மீனாட்சிசுந்தரனார் சாலை, அரசு மருத்துவமனை ரவுண்டானா, மேட்டூர் சாலை, பஸ் ஸ்டாண்ட், சுவஸ்திக் கார்னர், சத்தி சாலை, எல்லை மாரியம்மன் கோவில், மணிக்கூண்டு, பெரியார் வீதி, மரப்பாலம் மண்டபம் வீதி, ஆர்.கே.வி., சாலை, டவுன் போலீஸ் ஸ்டேஷன், அக்ரஹாரம் வீதி வழியாக இரவில் காரை வாய்க்காலை அடைந்து, வாய்க்காலில் விடப்படும். இந்த ஊர்வல பாதையில் வாகனங்களுக்கு அனுமதி இல்லை. அந்தந்த பகுதியில் மாற்று பாதையில் வாகனங்கள் திருப்பிவிடப்படும்.

கம்பம் பிடுங்கப்பட்டதும், மஞ்சள் நீராட்டு விழா நடக்கும். சிறுவர், சிறுமியர், இளைஞர், பெண்கள் என அனைத்து தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் மஞ்சள் நீரை ஊற்றி, மஞ்சள் நீராட்டு விழாவை கொண்டாடுவர். விழாவையொட்டி எஸ்.பி., சுஜாதா தலைமையில், 600 போலீசார், ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us