sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பஸ் டிரைவர், பயணியைதாக்கிய வாலிபர்கள் கைது

/

பஸ் டிரைவர், பயணியைதாக்கிய வாலிபர்கள் கைது

பஸ் டிரைவர், பயணியைதாக்கிய வாலிபர்கள் கைது

பஸ் டிரைவர், பயணியைதாக்கிய வாலிபர்கள் கைது


ADDED : ஏப் 09, 2025 01:39 AM

Google News

ADDED : ஏப் 09, 2025 01:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பஸ் டிரைவர், பயணியைதாக்கிய வாலிபர்கள் கைது

ஈரோடு:ஈரோடு பஸ் ஸ்டாண்டில் இருந்து அறச்சலுாருக்கு, 21ம் நெம்பர் டவுன் பஸ் இயக்கப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு அறச்சலுாரில் இருந்து ஈரோட்டுக்கு வந்தது. அறச்சலுார், முகாசி அனுமன்பள்ளியை சேர்ந்த டிரைவர் குமார், 37, ஓட்டினார். ஈரோடு காளைமாட்டு சிலை அருகே வந்தபோது, சாலையின் குறுக்கே மது போதையில் வந்த இருவர், பஸ்சை வழிமறித்தனர். டிரைவர் குமாரை தகாத வார்த்தை பேசி, பணி செய்ய விடாமல் தடுத்தனர். இதை பயணிகள் கண்டித்ததால், ஆத்திரமடைந்த இருவரும் பெரியவலசை சேர்ந்த வள்ளி நாராயணன், 70, என்ற

பயணியை தாக்கி விட்டு தப்ப முயன்றனர். டிரைவர் குமார் புகாரின்படி சூரம்பட்டி போலீசார் விசாரித்தனர். ஈரோடு, புதுமைக்காலனியை சேர்ந்த வினோத், 26; ஈரோடு தீயணைப்பு நிலைய அலுவலக பின்புற பகுதியை சேர்ந்த ஸ்ரீதரனை, 22, கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us