ADDED : ஏப் 11, 2025 01:29 AM
அ நிறம் | அளவு
பஸ் ஸ்டாண்ட் அருகில்இறந்து கிடந்த முதியவர்
காங்கேயம்:காங்கேயம் பஸ் ஸ்டாண்ட் அருகில், நேற்று முன்தினம் இரவு அடையாளம் தெரியாத, 70 வயது முதியவர் மயங்கிய நிலையில் வெகு நேரம் கிடந்தார். அப்பகுதி மக்கள் தகவலின்படி சென்ற காங்கேயம் போலீசார், முதியவரை மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவ பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. அவர் யார் என்பது குறித்து, போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
