ADDED : மே 28, 2026 05:18 AM

அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு, சம்பத் நகர் நவீன நுாலகத்தில், மாவட்ட நுாலக ஆணைக்குழு சார்பில் கோடை கொண்டாட்டம் என்ற நிகழ்வு கடந்த, இரு வாரங்களாக நடந்தது.
'கிட்ஸ் ரீடர்ஸ் கிளப்' மூலம் வாசித்தல், நாளிதழ், நுால்கள் படித்தல், கதை சொல்லுதல் போன்றவை குறித்து கோடை கால பயிற்சியாக வழங்கப்பட்டது. இதன் நிறைவு நிகழ்வுக்கு மாவட்ட நுாலக அலுவலர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாணவர்கள் தனித்திறனை வெளிப்படுத்தினர். மாணவி பிரவீணா வரவேற்றார். எழுத்தாளர் மற்றும் கதை சொல்லி சரிதா ஜோ, ஆசிரியர் தானதயாளன் ஆகியோர் பேசினர். கோடை கொண்டாடத்தில் பங்கேற்றவர்களுக்கு, சான்றிதழ் வழங்கப்பட்டது. நவீன நுாலக நுாலகர் ஷீலா நன்றி கூறினார்.
