ADDED : ஜன 15, 2025 12:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம்,:
தாராபுரத்தை அடுத்த குண்டடம், கொக்கம்பாளையம் அருகே சேவல் சூதாட்டம் நடப்பதாக, குண்டடம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சோதனையில் ஓடைக்கரை அருகே, சேவல் சூதாட்டம் நடப்பது தெரிந்தது. இதில் ஈடுபட்ட கொடுவாயை சேர்ந்த பெரியசாமி, 55, ஆறுக்குட்டி, 55, உள்பட எட்டு பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அவர்களிடம் நான்கு சேவல், 7,800 ரூபாயை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் தேவராஜபட்டினம் அருகே சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்ட நான்கு பேர் மீது, குண்டடம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர்களிடம், 2 சேவல், ௧,700 ரூபாயை பறிமுதல் செய்தனர்.