/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வரட்டுப்பள்ளம் அணையில் 13 மி.மீ., மழை பதிவு
/
வரட்டுப்பள்ளம் அணையில் 13 மி.மீ., மழை பதிவு
ADDED : ஜன 15, 2025 12:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு,:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக அவ்வப்போது லேசான மழை பெய்து வருகிறது. குறிப்பாக காலையில் பனிமூட்டமாகவும், 10:00 மணிக்கு மேல் கடும் வெயிலும், மதியம் மேக மூட்டமாகவும் காணப்படுகிறது.
நேற்று காலை நிலவரப்படி மாவட்டத்தில் அதிகபட்சமாக வரட்டுப்பள்ளத்தில், 13 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. பிற இடங்களில் பெய்த மழை விபரம் (மி.மீ.,ல்): பெருந்துறை-9, சென்னிமலை-7, கொடுமுடி-6, ஈரோடு-5, மொடக்குறிச்சி-1, குண்டேரிப்பள்ளம் அணை-1 மி.மீட்டர் என மழை பதிவானது. நேற்று காலை, 11:30 மணிக்குமேல் வானம் மேகமூட்டமாகவே காணப்பட்டது. சில இடங்களில் துாரல் மழை பெய்தது.