sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கொண்டத்து காளியம்மன் கோவிலில்2.5 டன் பூக்களால் தயாராகும் பல்லக்கு

/

கொண்டத்து காளியம்மன் கோவிலில்2.5 டன் பூக்களால் தயாராகும் பல்லக்கு

கொண்டத்து காளியம்மன் கோவிலில்2.5 டன் பூக்களால் தயாராகும் பல்லக்கு

கொண்டத்து காளியம்மன் கோவிலில்2.5 டன் பூக்களால் தயாராகும் பல்லக்கு


ADDED : ஜன 12, 2025 01:08 AM

Google News

ADDED : ஜன 12, 2025 01:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி: பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில், இரண்டரை டன் பூக்களால் மலர்ப்பல்லக்கு தயாராகிறது.

கோபி அருகே பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவிலில் நடப்பாண்டு குண்டம் விழா கடந்த, 9ல் நடந்தது. நேற்று முன்தினம் தேரோட்டம் நடந்தது. விழா முக்கிய நிகழ்வாக மலர் பல்லக்கு ஊர்வலம் நள்ளிரவு, 1:00 மணிக்கு மேல் துவங்குகிறது. இதற்காக வெள்ளை செவ்வந்தி, புளூ ஆஸ்திரேலியா உள்ளிட்ட பத்து வகையான இரண்டரை டன் பூக்களால் பிரமாண்ட மலர் பல்லக்கு தயாரிக்கும் பணி ஒரு வாரமாக நடக்கிறது. பூக்கள் மீது சீரியல் பல்பு மற்றும் ஒளிரும் விளக்குகளால் அலங்காரம் செய்யப்படுகிறது.

தவிர மலர்கள் மற்றும் அணிகலன்களால், அலங்கரிக்கப்பட்ட உற்சவர், கொண்டத்துக்காளியம்மன் கோவிலில் இருந்து பதி, வெள்ளாளபாளையம் பிரிவு, மேட்டுவலவு வழியாக, கோபி நகரை மலர் பல்லக்கு இன்று (12ம் தேதி) வந்தடைகிறது. விழா ஏற்பாட்டை அறநிலையத்துறையினர் தீவிரமாக செய்கின்றனர்.






      Dinamalar
      Follow us