sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வண்டல், களி மண் எடுக்க விண்ணப்பிக்க அழைப்பு

/

வண்டல், களி மண் எடுக்க விண்ணப்பிக்க அழைப்பு

வண்டல், களி மண் எடுக்க விண்ணப்பிக்க அழைப்பு

வண்டல், களி மண் எடுக்க விண்ணப்பிக்க அழைப்பு


ADDED : பிப் 22, 2025 05:18 AM

Google News

ADDED : பிப் 22, 2025 05:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் நீர்வள ஆதார அமைப்பு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கட்டுப்பாட்டில் உள்ள, 239 நீர் நிலைகள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கட்டுப்பாட்டில் உள்ள, 141 நீர் நிலைகள் என, 380 நீர் நிலைகளில் வண்டல் மண்ணை விவசாய பணிகளுக்கு இலவசமாக எடுத்து செல்ல அனுமதி வழங்கப்படு-கிறது.

இதற்கு அப்பகுதி தாசில்தார்களே இணைய வழியில் அனு-மதி வழங்கலாம். தேவைப்படும் விவசாயிகள், மண்பாண்ட தொழிலாளர் இணைய வழியில் விண்ணப்பித்து, சொந்த செலவில் எடுத்து செல்ல வேண்டும். ஆவணங்கள் சரிபார்க்கப்-பட்டு, 30 நாட்களுக்குள் எடுக்கும் வகையில் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்படும்.

விவசாய பயன்பாட்டுக்கு நஞ்சை நிலத்துக்கு, 2 ஆண்டுக்கு ஒரு முறை ஒரு ஏக்கருக்கு, 75 கனமீட்டர் அல்லது ஒரு ெஹக்-டேருக்கு, 185 கன மீட்டர்; புஞ்சை நிலத்துக்கு, 2 ஆண்டுக்கு ஒரு முறை ஒரு ஏக்கருக்கு, 90 கனமீட்டர் அல்லது ஒரு ெஹக்டே-ருக்கு, 222 கன மீட்டர் அளவிலும், மண் பாண்டம் தயாரிக்க, 60 கனமீட்டர் அளவிலும், சொந்த வீட்டு உபயோகத்துக்கு, 30 மீட்டர் அளவிலும் கட்டணமின்றி மண் எடுக்கலாம். tnesevai.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன் பெறலாம்.






      Dinamalar
      Follow us