ADDED : ஜூலை 06, 2024 06:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு : ஈரோடு மாநகராட்சியில், 290க்கும் மேற்பட்ட காலி பணியிடங்-களை நிரப்ப, தமிழ்நாடு துாய்மை பணியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து துணை ஆணையர் சரவ-ணக்குமாரிடம், சங்கம் சார்பில் அளிக்கப்பட்டுள்ள மனுவில் கூறி-யிருப்பதாவது: கொரோனா சிறப்பு நிதி, 15 ஆயிரம் ரூபாயை, அனைத்து துாய்மை பணியாளர்களுக்கும் வழங்க வேண்டும்.
குழு பணியாளர் அனைவருக்கும் ஈ.பி.எப்., பிடித்தம் செய்ய வேண்டும். ஓய்வு பெறும் பணியாளர்களுக்கு உடனே ஓய்வூ-தியம், பணிக்கொடையை வழங்க வேண்டும். அரசாணைப்படி அகவிலை படி உயர்வு, நிலுவைத்தொகை வழங்க வேண்டும். 2014க்கு பிறகு, 290க்கும் மேற்பட்ட நிரந்தர பணியாளர் ஓய்வு பெற்றுள்ளனர். அந்த காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். இவ்வாறு மனுரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.