/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'உயர்வுக்கு படி முகாம்' ஆலோசனை கூட்டம்
/
'உயர்வுக்கு படி முகாம்' ஆலோசனை கூட்டம்
ADDED : செப் 07, 2024 08:08 AM
ஈரோடு: 'நான் முதல்வர் திட்டத்தில்', 'உயர்வுக்கு படி-2024' முகாம் முன் திட்டமிடல் கூட்டம் ஈரோட்டில் நடந்தது. கலெக்டர் ராஜ-கோபால் சுன்கரா தலைமை வகித்தார்.
மாவட்டத்தில் கடந்த, 2022-23, 2023-24ம் கல்வி ஆண்டில் உயர் கல்வி தொடராத, பிளஸ் 2 மாணவர்கள் உயர் கல்வி தொடர்வதற்கு ஏதுவாக, 'உயர்வுக்கு படி 2024' முகாம், ஈரோடு மற்றும் கோபியில் இரண்டு கட்டமாக நடக்க உள்ளது.
ஈரோடு வருவாய் கோட்டத்தில், வரும் 9 மற்றும் 19; கோபி வருவாய் கோட்டத்தில் வரும் 12 மற்றும், 23 தேதிகளில் நடக்க உள்ளது. உயர் கல்வி தொடராத மாணவ, மாணவியர்களை கண்-டறிந்து தொலைபேசி வாயிலாகவோ அல்லது நேரடியாகவோ அணுகி முகாமில் பங்கேற்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்-நிகழ்ச்சியுடன் இணைந்து கல்வி கடன் வழங்கும் லோன் மேளா, 9ல் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்-ளது.