/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஊக்கத்தொகை மதிப்பீட்டு தேர்வு வினாத்தாளுக்கு பலத்த பாதுகாப்பு
/
ஊக்கத்தொகை மதிப்பீட்டு தேர்வு வினாத்தாளுக்கு பலத்த பாதுகாப்பு
ஊக்கத்தொகை மதிப்பீட்டு தேர்வு வினாத்தாளுக்கு பலத்த பாதுகாப்பு
ஊக்கத்தொகை மதிப்பீட்டு தேர்வு வினாத்தாளுக்கு பலத்த பாதுகாப்பு
ADDED : செப் 07, 2024 08:07 AM
ஈரோடு: யூ.பி.எஸ்.சி., படிப்போர் ஊக்கத்தொகைக்கான நான் முதல்வன் மதிப்பீட்டு தேர்வு வினாத்தாள் ஈரோடு வந்தது.
'நான் முதல்வர் போட்டி தேர்வு' பிரிவு சார்பில், யூ.பி.எஸ்.சி., தேர்வுக்கு தயாராகும் மாணவ, மாணவியருக்கு இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் முதல் நிலை தேர்வுக்கு தயா-ராகி வருவோர் மதிப்பீட்டு தேர்வு நடத்தி, அதில், 1,000 மாணவ, மாணவியர் தேர்வு செய்யப்பட உள்ளனர் அவர்களுக்கு மாதம், 7,500 ரூபாய் வீதம், 10 மாதங்களுக்கு வழங்கப்படும். நடப்பாண்டு முதல் நிலை தேர்வர் ஊக்கத்தொகை மற்றும் இல-வச பயிற்சி பெற, மதிப்பீட்டு தேர்வு நாளை நடக்கவுள்ளது.
இதற்கான தேர்வு, ஈரோடு பி.எஸ்.பார்க் அரசு மாதிரி மேல்நி-லைப்பள்ளி, ஈரோடு கலைமகள் மேல்நிலைப்பள்ளி என இரு மையங்களில் நடக்கிறது. தேர்வில் பங்கேற்க, 658 பேர் விண்-ணப்பித்துள்ளனர். தேர்வுக்கான வினாத்தாள், ஈரோடு காந்திஜி சாலையில் உள்ள அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் உள்ள காப்பு மையத்தில் வைக்கப்பட்டு, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.