ADDED : ஜூலை 13, 2011 03:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: காவேரி ரயில்வே ஸ்டேஷனுக்கும் ஆனங்கூர் ரயில்வே ஸ்டேஷனுக்கும் இடையில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர், நேற்று முன்தினம் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். அவர் ரயிலில் சென்ற போது தவறி விழுந்து இறந்தாரா என்று தெரியவில்லை. உடல் அடையாளம் தெரியாத அளவில் சிதைந்து காணப்பட்டது.
ஈரோடு ரயில்வே போலீஸ் எஸ்.ஐ., பன்னீர்செல்வம் விசாரிக்கிறார்.

