sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கல்வி கட்டண கொள்ளைமாணவர்கள் ஆர்ப்பாட்டம்

/

கல்வி கட்டண கொள்ளைமாணவர்கள் ஆர்ப்பாட்டம்

கல்வி கட்டண கொள்ளைமாணவர்கள் ஆர்ப்பாட்டம்

கல்வி கட்டண கொள்ளைமாணவர்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : ஜூலை 17, 2011 02:25 AM

Google News

ADDED : ஜூலை 17, 2011 02:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு தலைமை தபால் நிலையம் முன்பு, இந்திய மாணவர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட தலைவர் தினேஷ் தலைமை வகித்தார்.

மாநில துணை செயலாளர் பால சந்திர போஸ் கோரிக்கை குறித்து பேசினார்.தேவையற்ற பாடங்களை நீக்கிவிட்டு, சமச்சீர் கல்வியை உடனடியாக அமல்படுத்த வேண்டும். தனியார் பள்ளியின் கட்டாய கட்டண கொள்ளையை தடுக்க வேண்டும். கும்பகோணம் தீ விபத்து நடந்த, ஜூலை16ம் தேதியை, 'கல்வி கட்டண கொள்ளை' தினமாக, இந்திய மாணவர் சங்கம் கடைபிடிக்கிறது.கட்டண முறைகேடுகளை முறைப்படுத்த அமைக்கப்பட்ட குழு, நீதிபதி கோவிந்தராஜன், கமிட்டி நீதிபதி ராஜபாண்டியன் ஆகியோர் நிர்ணயித்த கட்டணத்தையே அனைத்து தனியார் பள்ளிகளும் பின்பற்ற வேண்டும். அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் கனிமொழி, மாநகர செயலாளர் கவுதம், மாவட்ட குழு உறுப்பினர் யுவராஜ் உட்பட மாணவர்கள் பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us