ADDED : மார் 06, 2024 02:14 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:சம
வேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி, இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள்
இயக்கத்தினர் ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில், கடந்த வாரம்
முதல் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கோரிக்கைகளை வலியுறுத்தி,
ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம்
நடந்தது. சங்க மாவட்ட செயலாளர் கார்த்திக் தலைமை வகித்தார். மாவட்ட துணை
தலைவர் சேகர் முன்னிலை வகித்தார். 16ம் நாளாக நேற்றும் ஆர்ப்பாட்டம்
நடந்தது.
