நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மணல் மூட்டை தயார்!
நம்பியூர், அக். 4----
வடகிழக்கு பருவமழை தொடங்கும் நிலையில், நம்பியூர் உட்கோட்ட நெடுஞ்சாலைத்துறை சார்பில், போதிய மணல் மூட்டை, ஜே.சி.பி., இயந்திரம், நம்பியூர் நெடுஞ்சாலை துறை அலுவலக வளாகத்தில் தயாராக உள்ளன.
சாலை உடைப்பு ஏற்பட்டால் அதை சரி செய்யும் உபகரணங்கள், சாலை பணிக்கான அவசரகால வேலையாட்கள் மற்றும் சாலை பணியாளர்கள் உதவியாளர் அடங்கிய குழு உதவி பொறியாளர்,கோட்ட பொறியாளர் மேற்பார்வையில் தயார் நிலையில் உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.