ADDED : பிப் 05, 2025 01:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஏரிகளில் அமைச்சர் ஆய்வு
காங்கேயம் : காங்கேயம் வட்டாரத்தில் ஊரக வளர்ச்சித்துறை கட்டுபாட்டில் உள்ள ஏரிகளை, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதுகுறித்து அமைச்சர் கூறியதாவது:
காங்கேயம் வட்டாரத்தில் கீரனுார் ஊராட்சி காமாட்சிபுரத்தில் ஊரக வளர்ச்சித்துறை கட்டுபாட்டில் உள்ள, 27.5 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரியில் நீர் செறிவூட்டுவது தொடர்பாகவும், மறவபாளையம் ஊராட்சி செம்மங்குழி பாளையத்தில், 15 ஏக்கர் பரப்பளவு ஏரியில், 7.28 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள தடுப்பணை, செம்மங்குழிபாளையத்தில் பவானி சாகர் பாசன பகுதியில் சேமிக்கப்படும்
கசிவுநீரை குடிநீர் பயன்பாட்டுக்கு பயன் படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.