ADDED : பிப் 05, 2025 01:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நீதிமன்ற புறக்கணிப்பு
ஈரோடு :ஈரோடு வக்கீல் சங்கத்தை சேர்ந்த ஒருவரை, முன் விரோதம் காரணமாக பக்கத்து வீட்டில் வசிக்கும் நபர், கொலை செய்ய முயன்றார். இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசில், அவர் புகாரளித்தார்.
ஆனால், கொலை செய்ய முயன்றவரை போலீசார் கைது செய்யவில்லை என்று கூறி, தி பார் அசோசியேஷன் சார்பில், நேற்று நீதிமன்ற பணியை புறக்கணித்தனர். இதில், 600க்கும் மேற்பட்ட வக்கீல்கள் கலந்து கொண்டனர். இதேபோல் பவானி நீதிமன்றத்தையும், தி பார் அசோசியேஷன் வக்கீல்கள் புறக்கணித்தனர்.