ADDED : மார் 19, 2025 01:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மகன் தற்கொலை; தாய் புகார்
பவானி:அம்மாபேட்டை அருகே நெரிஞ்சிப்பேட்டை, படகுத்துறை வீதியை சேர்ந்தவர் முனியாண்டி, 36; கூலி தொழிலாளி. இவரின் மனைவி அகல்யா. இருவருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. குடும்ப தகராறால் பிரிந்து வசித்து வந்தனர். நெரிஞ்சிப்பேட்டை படகு துறையில், முனியாண்டி துாக்கிட்டு நேற்று தற்கொலை செய்து கொண்டார். அம்மாபேட்டை போலீசார் உடலைக் கைப்பற்றி அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக முனியாண்டியின் தாயார் மணி, 70, அம்மாபேட்டை போலீசில் புகாரளித்துள்ளார்.