ADDED : மார் 21, 2025 01:21 AM
அ நிறம் | அளவு
வாய்க்காலில் குளித்தவர்நீரில் மூழ்கி பலி
டி.என்.பாளையம்:டி.என்.பாளையம் அருகேயுள்ள கொடிவேரி அணை பகுதி அரக்கன்கோட்டை வாய்க்கால் ஒட்டர்பாளையம் பகுதியில், 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் நேற்று குளித்தார்.
திடீரென வாலிபர் தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டார். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் பங்களாபுதுார் போலீசுக்கு தகவல் தந்தனர். சத்தி தீயணைப்பு நிலைய வீரர்களுடன் சென்ற போலீசார், உடலை மீட்டனர். அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரிக்கின்றனர்.
