/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
போலீசார் வழக்கு பதிவால்ரத்தானது ஆர்ப்பாட்டம்
/
போலீசார் வழக்கு பதிவால்ரத்தானது ஆர்ப்பாட்டம்
ADDED : மார் 25, 2025 12:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போலீசார் வழக்கு பதிவால்ரத்தானது ஆர்ப்பாட்டம்
பவானி:சித்தோடு அருகே ஆட்டையாம்பளையம் பிரிவில், கீழ்பவானி வாய்க்கால் ஓடையில், இலும்பு ஆலை அமில கழிவு நீர் கலக்கப்பட்டது. இதனால் கிணறுகள், போர்வெல் தண்ணீர் நிறம் மாறியது.
நடவடிக்கை எடுக்காததால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், ஆட்டையாம்பாளையம் பிரிவில், ௨௪ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர். நேற்று முன்தினம் ஈரோடு, மாமரத்துப்பாளையம் சிவக்குமார் புகாரால், சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதை தொடர்ந்து நேற்று அறிவித்திருந்த ஆர்ப்பாட்டத்தை, அப்பகுதி மக்கள் ரத்து செய்து விட்டனர்.