/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஆராய்ச்சி நிலைய சுற்றுலாவிவசாயிகளுக்கு அழைப்பு
/
ஆராய்ச்சி நிலைய சுற்றுலாவிவசாயிகளுக்கு அழைப்பு
ADDED : மார் 27, 2025 01:37 AM
ஆராய்ச்சி நிலைய சுற்றுலாவிவசாயிகளுக்கு அழைப்பு
சென்னிமலை:சென்னிமலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டம் சென்னிமலை வட்டாரத்தின் சார்பாக, மார்ச், ௨௭, ௨௮ (இன்று, நாளை), கரும்பு விவசாயத்தில் புதிய ரகங்கள் குறித்தும், சாகுபடி தொழில் நுட்பங்கள் குறித்தும் அறிய, கோவையில் உள்ள கரும்பு இனப்பெருக்க ஆராய்ச்சி நிலையத்துக்கு, 50 விவசாயிகளை சுற்றுலா அழைத்துச் செல்லப்பட உள்ளது. விருப்பமுள்ள விவசாயிகள், தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர் அல்லது வட்டார தொழில் நுட்ப மேலாளரிடம் முன்பதிவு செய்து கொள்ளலாம். தொடர்புக்கு வேளாண்மை அலுவலர், 80563-83287 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.