/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரவுடி கொலையில் நால்வருக்கு 'கஸ்டடி'
/
ரவுடி கொலையில் நால்வருக்கு 'கஸ்டடி'
ADDED : ஏப் 16, 2025 01:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரவுடி கொலையில் நால்வருக்கு 'கஸ்டடி'
ஈரோடு:சேலத்தை சேர்ந்த ரவுடி ஜான், நசியனுார் அருகே காரில் சென்றபோது கொலை செய்யப்பட்டார்.இது தொடர்பாக சேலத்தை சேர்ந்த நான்கு பேர், ஈரோடு நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இவர்கள் திருப்பூர், கோவை சிறையில் அடைக்கப்பட்டனர். கொலை தொடர்பாக விசாரிக்க சித்தோடு போலீசார் ஈரோடு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில், ஏழு நாட்கள் கஸ்டடி கோரி மனு செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி முருகேசன், இரண்டு நாட்கள் கஸ்டடி எடுத்து விசாரிக்க அனுமதித்தார். 17ம் தேதி மாலை நால்வரையும் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.
அதேசமயம் கொலை வழக்கில் இதுவரை, 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

