sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பவானியில் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அகற்றப்படுமா?

பவானியில் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அகற்றப்படுமா?

பவானியில் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அகற்றப்படுமா?


ADDED : ஆக 04, 2025 08:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 04, 2025 08:58 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பவானி: பவானி நகராட்சியில், 27 வார்டுகள் உள்ளன. இவற்றில், 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். நகர் பகுதியில் நாளுக்குநாள் குடியிருப்பு பெருகி வருகிறது. இதற்கு தகுந்தாற்போல் சாலை வசதி, சாக்கடை வசதியை, நகராட்சி நிர்வாகம் புதிய திட்டத்தின் மூலம் அமல்படுத்தி வருகிறது.

இந்த வகையில் பவானி மகளிர் போலீஸ் ஸடேஷன் முன்புறம், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செல்லும் சாலையில், சில நாட்களுக்கு முன் நகராட்சி சார்பில், 68 லட்சம் ரூபாய் மதிப்பில் சாக்கடை அமைக்கும் பணி தொடங்கியது. இதனால் சாலை குறுகலாகி விட்டது. அது மட்டுமின்றி டி.எஸ்.பி., அலுவலகம் அருகே பிரதான சாலை வளைவில், சில வியபாரிகள் கடை போட்டுள்ளனர்.

இதனால் அரசு ஆண்கள் மேல்நிலைபள்ளி வீதியில் இருந்து மெயின் ரோட்டிற்கு திரும்பும் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு ஆளாகின்றனர். இதேபோல் பவானி பழைய பாலம் அருகே, காவேரி வீதியில் சாக்கடை கால்வாயை ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இப்படி நகரின் பல்வேறு பகுதிகளில் ஆக்கரமிப்புகளால், வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே நகராட்சி பகுதியில் ஆக்கரமித்து கட்டப்பட்டுள்ள கட்டடங்களை அளவீடு செய்து அகற்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us